«مَنْ كَانَتْ لَهُ أَرْضٌ فَلْيَزْرَعْهَا، أَوْ لِيُزْرِعْهَا أَخَاهُ، وَلَا يُكْرِهَا»، قَالَ: نَعَمْ
3121. ஹம்மாம் பின் யஹ்யா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
சுலைமான் பின் மூசா (ரஹ்) அவர்கள் அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்களிடம் “நபி (ஸல்) அவர்கள், “யாரிடம் நிலம் உள்ளதோ அவர் அதில் தாமே பயிரிடட்டும்! அல்லது தம் சகோதரருக்குப் பயிரிடக் கொடுத்துவிடட்டும்;அதற்காக (குத்தகை) தொகை பெற வேண்டாம்” என்று கூறினார்கள் என ஜாபிர் (ரலி) அவர்கள் உங்களுக்கு அறிவித்தார்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அதாஉ (ரஹ்) அவர்கள் “ஆம்” என்றார்கள்.
Book : 21