🔗

முஸ்லிம்: 3135

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«كُنَّا لَا نَرَى بِالْخِبْرِ بَأْسًا حَتَّى كَانَ عَامُ أَوَّلَ، فَزَعَمَ رَافِعٌ أَنَّ نَبِيَّ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْهُ»


3135. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(முஆவியா (ரலி) அவர்களது ஆட்சி யின்) முதலாண்டுவரை “முகாபரா” முறையில் நிலத்தைக் குத்தகைக்கு விடுவதை நாங்கள் குற்றமாகக் கருதாமல் இருந்தோம். பின்னர் (முஆவியா (ரலி) அவர்களது ஆட்சியின் இறுதிக் கட்டத்தில்) ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் அதற்குத் தடைவிதித்துள்ளார்கள்” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 21