🔗

முஸ்லிம்: 3589

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

سُئِلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الذَّرَارِيِّ مِنَ الْمُشْرِكِينَ؟ يُبَيَّتُونَ فَيُصِيبُونَ مِنْ نِسَائِهِمْ وَذَرَارِيِّهِمْ “، فَقَالَ: «هُمْ مِنْهُمْ»


பாடம் : 9

(போர்ச் சூழலில் எதிரிகளின்) பெண்களையும் குழந்தைகளையும் இரவு நேரங்களில் தற்செயலாகக் கொன்றுவிட்டால் குற்றமாகாது.

3589. ஸஅப் பின் ஜஸ்ஸாமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் “இணைவைப் போ(ரான எதிரிநாட்டின)ரின் பெண்களும் குழந்தைகளும் (போரில் சிக்கிச்) சேதமடையும் (வாய்ப்பு உண்டு என்னும்) பட்சத்தில் அவர்கள்மீது இரவு நேரத்தில் தாக்குதல் நடத்தலாமா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் “அவர்களும் (எதிரிகளான) அவர்களைச் சேர்ந்தவர்களே” என்று பதிலளித்தார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

Book : 32