أَخَذَ أَبِي مِنَ الْخُمْسِ سَيْفًا، فَأَتَى بِهِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «هَبْ لِي هَذَا»، فَأَبَى، فَأَنْزَلَ اللهُ عَزَّ وَجَلَّ: {يَسْأَلُونَكَ عَنِ الْأَنْفَالِ قُلِ الْأَنْفَالُ لِلَّهِ وَالرَّسُولِ} [الأنفال: 1]
பாடம் : 12
எதிரிகளிடமிருந்து கைப்பற்றப்படும் செல்வங்கள்.
3596. முஸ்அப் பின் சஅத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
என் தந்தை (சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள்), “குமுஸ்” (ஐந்திலொரு பங்கு) நிதியிலிருந்து ஒரு வாளை எடுத்துக் கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் சென்று, “இதை எனக்கு அன்பளிப்பாகத் தாருங்கள்” என்று கேட்டார்கள்.
அப்போதுதான் வல்லமையும் மாண்பும்மிக்க அல்லாஹ், “(நபியே!) போர்க்களத்தில் எதிரிகளிடமிருந்து கைப்பற்றப்படும் செல்வங்கள் குறித்து அவர்கள் உம்மிடம் வினவுகின்றனர். அந்தச் செல்வங்கள் (பற்றி முடிவு செய்யும் அதிகாரம்) அல்லாஹ்வுக்கும் இத் தூதருக்கும் உரியது” என்று கூறுவீராக!” (8:1) எனும் வசனத்தை அருளினான்.
Book : 32