🔗

முஸ்லிம்: 3675

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

دَمِيَتْ إِصْبَعُ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَعْضِ تِلْكَ الْمَشَاهِدِ، فَقَالَ: «هَلْ أَنْتِ إِلَّا إِصْبَعٌ دَمِيتِ، وَفِي سَبِيلِ اللهِ مَا لَقِيتِ»


3675. ஜுன்துப் பின் அப்தில்லாஹ் பின் சுஃப்யான் அல்பஜலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பங்குபெற்ற ஒரு போரில் அவர்களது (கால்) விரலில் (காயம் ஏற்பட்டு) இரத்தம் சொட்டியது. அப்போது அவர்கள்,

நீ இரத்தம் சொட்டுகின்ற

ஒரு விரல்தானே

நீ பட்டதெல்லாம்

இறைவழியில்தானே

என்று (ஈரடிச் சீர்பாடல் வடிவில்) கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 32