🔗

முஸ்லிம்: 3677

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَبْطَأَ جِبْرِيلُ عَلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ الْمُشْرِكُونَ: قَدْ وُدِّعَ مُحَمَّدٌ، فَأَنْزَلَ اللهُ عَزَّ وَجَلَّ: {وَالضُّحَى وَاللَّيْلِ إِذَا سَجَى مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَى} [الضحى: 2]


3677. ஜுன்துப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (சில நாட்கள்) தாமதமாக வந்தார்கள். அப்போது இணைவைப்பாளர்கள், “முஹம்மத் விடை கொடுக்கப்பட்டு விட்டார்” என்று கூறினர்.

அப்போது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், “முற்பகலின் மீது சத்தியமாக! இருண்டுவிட்ட இரவின் மீது சத்தியமாக! (நபியே!) உம்முடைய இறைவன் உம்மைக் கைவிடவுமில்லை; கோபங்கொள்ளவுமில்லை” (93:1-3) எனும் வசனங்களை அருளினான்.

Book : 32