«اللهُمَّ إِنَّ الْعَيْشَ عَيْشُ الْآخِرَةِ» – قَالَ شُعْبَةُ: أَو قَالَ: – «اللهُمَّ لَا عَيْشَ إِلَّا عَيْشُ الْآخِرَهْ، فَأَكْرِمِ الْأَنْصَارَ وَالْمُهَاجِرَهْ»
3691. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அகழ் தோண்டிக்கொண்டிருந்தபோது),
“இறைவா! மறுமை வாழ்வே
(நிரந்தரமான) வாழ்வாகும்”
அல்லது “இறைவா!
மறுமை வாழ்வைத் தவிர
வேறு (நிரந்தர) வாழ்வு
வேறெதுவுமில்லை”
ஆகவே, (அதற்காகப் பாடுபடும்
அன்சாரிகளையும் முஹாஜிர்களையும்
நீ கண்ணியப்படுத்துவாயாக”
என்று (பாடியபடி) கூறினார்கள். “அல்லது” எனும் ஐயப்பாட்டுடன் ஷுஅபா (ரஹ்) அவர்களே அறிவித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
Book : 32