🔗

முஸ்லிம்: 3692

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

كَانُوا يَرْتَجِزُونَ وَرَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَهُمْ، وَهُمْ يَقُولُونَ: اللهُمَّ لَا خَيْرَ إِلَّا خَيْرُ الْآخِرَهْ، فَانْصُرِ الْأَنْصَارَ وَالْمُهَاجِرَهْ، وَفِي حَدِيثِ شَيْبَانَ بَدَلَ فَانْصُرْ: فَاغْفِرْ


3692. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (அகழ் தோண்டிக்கொண்டு) இருந்த போது பின்வரும் யாப்பு வகைக் கவிதையைப் பாடிக்கொண்டிருந்தார்கள்:

இறைவா!

மறுமையின் நன்மையைத் தவிர

வேறு (நிலையான) நன்மை

எதுவுமில்லை.

ஆகவே, (அதற்காகப் பாடுபடும்)

அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும்

நீ உதவி செய்வாயாக.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அவற்றில் ஷைபான் பின் ஃபர்ரூக் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “உதவி செய்வாயாக” என்பதற்குப் பகரமாக “மன்னிப்பருள்வாயாக” என்று இடம்பெற்றுள்ளது.

Book : 32