🔗

முஸ்லிம்: 3794

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَتَاهُ آتٍ، فَقَالَ: هَا ذَاكَ ابْنُ حَنْظَلَةَ يُبَايِعُ النَّاسَ، فَقَالَ: عَلَى مَاذَا؟ قَالَ: عَلَى الْمَوْتِ، قَالَ: «لَا أُبَايِعُ عَلَى هَذَا أَحَدًا بَعْدَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»


3794. அப்துல்லாஹ் பின் ஸைத் அல் அன்சாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

(“அல்ஹர்ரா”ப் போரின்போது) என்னிடம் ஒருவர் வந்து, “இதோ அப்துல்லாஹ் பின் ஹன்ழலா (ரலி) அவர்கள் மக்களிடம் உறுதிமொழி வாங்கிக்கொண்டிருக்கிறார்” என்று கூறினார். அவரிடம் நான், “எதற்காக அவர் உறுதிமொழி வாங்குகிறார்?” என்று கேட்டேன். அதற்கு அவர், “மரணத்தைச் சந்திக்கவும் தயாராயிருக்கும்படி (உறுதிமொழி வாங்குகிறார்)” என்று கூறினார். அதற்கு நான், “இதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (பைஅத்துர் ரிள்வானில் உறுதிமொழி அளித்த) பின்னர் வேறு யாரிடமும் நான் உறுதிமொழி அளிக்கமாட்டேன்” என்று கூறினேன்.

Book : 33