🔗

முஸ்லிம்: 3882

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَنَّ فُقَيْمًا اللَّخْمِيَّ، قَالَ لِعُقْبَةَ بْنِ عَامِرٍ: تَخْتَلِفُ بَيْنَ هَذَيْنِ الْغَرَضَيْنِ وَأَنْتَ كَبِيرٌ يَشُقُّ عَلَيْكَ، قَالَ عُقْبَةُ: لَوْلَا كَلَامٌ سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ أُعَانِيهِ، قَالَ الْحَارِثُ: فَقُلْتُ لِابْنِ شَمَاسَةَ: وَمَا ذَاكَ؟ قَالَ: إِنَّهُ قَالَ: «مَنْ عَلِمَ الرَّمْيَ، ثُمَّ تَرَكَهُ، فَلَيْسَ مِنَّا» أَوْ «قَدْ عَصَى»


3882. அப்துர்ரஹ்மான் பின் ஷிமாஸா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஃபுகைம் அல்லக்மீ என்பவர் உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்களிடம் “(முதியவரான) தாங்கள் (அம்பெய்வதற்காக) இவ்விரு இலக்குகளுக்கிடையே உங்களைச் சிரமப்படுத்திக் கொள்கிறீர்களே!” என்று கேட்டார். அதற்கு உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து ஒரு செய்தியை நான் செவியுற்றிராவிட்டால் இதற்காக நான் சிரமம் எடுத்துக்கொள்ளமாட்டேன்” என்று பதிலளித்தார்கள்.

இதன் அறிவிப்பாளரான ஹாரிஸ் பின் யஅகூப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் அப்துர்ரஹ்மான் பின் ஷிமாஸா (ரஹ்) அவர்களிடம், “அது என்ன (செய்தி)?” என்று கேட்டேன். அதற்கு அப்துர்ரஹ்மான், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், யார் அம்பெய்வதைப் பயின்ற பின் அதைக் கைவிட்டுவிடுகிறாரோ அவர் “நம்மைச் சேர்ந்தவர் அல்லர்” அல்லது “(நமக்கு) மாறுசெய்துவிட்டார்” என்று கூறினார்கள்” என பதிலளித்தார்கள்.

அத்தியாயம்: 33