🔗

முஸ்லிம்: 3966

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

خَطَبَنَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي يَوْمِ نَحْرٍ، فَقَالَ: «لَا يُضَحِّيَنَّ أَحَدٌ حَتَّى يُصَلِّيَ»، قَالَ رَجُلٌ: عِنْدِي عَنَاقُ لَبَنٍ هِيَ خَيْرٌ مِنْ شَاتَيْ لَحْمٍ، قَالَ: «فَضَحِّ بِهَا، وَلَا تَجْزِي جَذَعَةٌ عَنْ أَحَدٍ بَعْدَكَ»


3966. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “நஹ்ரு”டைய (துல்ஹஜ் பத்தாவது) நாளன்று எங்களிடையே உரையாற்றினார்கள். அப்போது அவர்கள், “தொழுவதற்கு முன்பே யாரும் குர்பானி கொடுக்க வேண்டாம்” என்று கூறினார்கள். ஒரு மனிதர், “என்னிடம் ஒரு வயதுக்குட்பட்ட பால்குடி மறவாத வெள்ளாட்டுக் குட்டி ஒன்று உள்ளது. அது இரு இறைச்சி ஆடுகளைவிடச் சிறந்ததாகும்” என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அதையே நீர் குர்பானி கொடுப்பீராக! ஒரு வயதுக்குட்பட்ட வெள்ளாட்டுக் குட்டி உமக்குப் பிறகு வேறெவருக்கும் செல்லாது”என்று கூறினார்கள்.

Book : 35