🔗

முஸ்லிம்: 3988

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

كُنَّا لَا نَأْكُلُ مِنْ لُحُومِ بُدْنِنَا فَوْقَ ثَلَاثِ مِنًى، فَأَرْخَصَ لَنَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «كُلُوا وَتَزَوَّدُوا»، قُلْتُ لِعَطَاءٍ: قَالَ جَابِرٌ: «حَتَّى جِئْنَا الْمَدِينَةَ؟» قَالَ: «نَعَمْ»


3988. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் மினாவில் தங்கும் நாளிலிருந்து மூன்று நாட்களுக்கு மேல் குர்பானிப் பிராணிகளின் இறைச்சியை உண்ணாமல் இருந்தோம். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(இப்போது நீங்கள் உண்ணலாம்;சேமித்தும்வைக்கலாம்” என்று கூறி, எங்களுக்கு அனுமதி வழங்கினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் அதாஉ (ரஹ்) அவர்களிடம் “நாங்கள் மதீனா வரும்வரை (சேமித்துவைத்தோம்)” என்று ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம்” என்று விடையளித்தார்கள்.

அத்தியாயம்: 35