أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَدَعَوْتُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ هَذَا؟» قُلْتُ: أَنَا، قَالَ: فَخَرَجَ وَهُوَ يَقُولُ: «أَنَا أَنَا»
பாடம் : 8
“யார் அது?” என்று கேட்கப்படும்போது (பெயரைச் சொல்லாமல்) “நான்” என்று அனுமதி கேட்பவர் பதிலளிப்பது வெறுக்கத்தக்கதாகும்.
4356. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று (அவர்களை) அழைத்தேன். நபி (ஸல்) அவர்கள், “யார் அது?” என்று கேட்டார்கள். நான் “நான்தான்” என்று பதிலளித்தேன். அப்போது அவர்கள் “நான்… நான் (என்றால்…?)” என்று கூறியபடி வெளியே வந்தார்கள்.
Book : 38