🔗

முஸ்லிம்: 443

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«لَا يُمْسِكَنَّ أَحَدُكُمْ ذَكَرَهُ بِيَمِينِهِ وَهُوَ يَبُولُ، وَلَا يَتَمَسَّحْ مِنَ الْخَلَاءِ بِيَمِينِهِ، وَلَا يَتَنَفَّسْ فِي الْإِنَاءِ»


பாடம் : 18

(மல ஜலம் கழித்த பின்) வலக்கரத்தால் துப்புரவு செய்யலாகாது.

443. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் சிறுநீர் கழிக்கும்போது அவர் தமது பிறவி உறுப்பை வலக்கரத்தால் பிடிக்க வேண்டாம். மலஜலம் கழித்த பின் வலக் கரத்தால் சுத்தம் செய்ய வேண்டாம். நீங்கள் (ஏதேனும் பருகும்போது) பாத்திரத்தினுள் மூச்சுவிட வேண்டாம்.

இதை அபூகத்தாதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Book : 2