🔗

முஸ்லிம்: 4531

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«لَا يَقُولَنَّ أَحَدُكُمْ عَبْدِي وَأَمَتِي كُلُّكُمْ عَبِيدُ اللهِ، وَكُلُّ نِسَائِكُمْ إِمَاءُ اللهِ، وَلَكِنْ لِيَقُلْ غُلَامِي وَجَارِيَتِي وَفَتَايَ وَفَتَاتِي»


பாடம் : 3

(அடிமைக்கும் அடிமைப் பெண்ணுக்கும் முறையே) “அப்த்”, “அமத்” ஆகிய சொற்களையும் (அடிமையின் உரிமையாளருக்கு) “மவ்லா”, “சய்யித்” ஆகிய சொற்களையும் ஆள்வது தொடர்பான சட்டம்.

4531. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் யாரும் (தம் அடிமையை அடிமையே, அடிமைப் பெண்ணே எனும் பொருள் கொண்ட) அப்தீ, அமத்தீ எனும் சொல்லால் அழைக்க வேண்டாம். (ஏனெனில்,) உங்களில் ஒவ்வொருவரும் அல்லாஹ்வின் அடிமை (அப்து)களே;உங்களில் ஒவ்வொரு பெண்ணும் அல்லாஹ்வின் அடிமை (அமத்)களே. மாறாக, ஃகுலாமீ, ஜாரியத்தீ, ஃபத்தாய,ஃபத்தாத்தீ ஆகிய சொற்களால் அழைக்கட்டும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 40