🔗

முஸ்லிம்: 4533

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«لَا يَقُلْ أَحَدُكُمُ اسْقِ رَبَّكَ، أَطْعِمْ رَبَّكَ، وَضِّئْ رَبَّكَ، وَلَا يَقُلْ أَحَدُكُمْ رَبِّي، وَلْيَقُلْ سَيِّدِي مَوْلَايَ، وَلَا يَقُلْ أَحَدُكُمْ عَبْدِي أَمَتِي، وَلْيَقُلْ فَتَايَ فَتَاتِي غُلَامِي»


4533. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் யாரும் (ஓர் அடிமையிடம்) “உன் “ரப்பு”க்கு (அதிபதிக்கு) பருகத் தண்ணீர் கொடு. உன் “ரப்பு”க்கு உணவு கொடு. உன் “ரப்பு”க்கு அங்கத் தூய்மை (உளூ) செய்ய உதவு” என்று கூற வேண்டாம். உங்களில் யாரும் (தம் உரிமையாளரை) “ரப்பீ” என்று கூற வேண்டாம். மாறாக, “சய்யிதீ”, “மவ்லாய” என்று கூறட்டும். உங்களில் யாரும் (என் அடிமை, என் அடிமைப் பெண் என்று கூற) அப்தீ, அமத்தீ என்று கூற வேண்டாம். மாறாக, “ஃபத்தாய” (என் பணியாள்) “ஃபத்தாத்தீ” (என் பணிப்பெண்) என்று கூறட்டும்.

Book : 40