جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَكَرَ بِمِثْلِ حَدِيثِ جَرِيرٍ، وَزَادَ: فَقَالَ: «نَعَمْ، وَأَبِيكَ لَتُنَبَّأَنَّ»
4981. ஹதீஸ் எண்-4979 இல் வரும் செய்தி மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
இவற்றில், “ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்” என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
மேலும் இவற்றில், “ஆம்; உன் தந்தையின் மீது அறுதி(யிட்டுச் சொல்கிறேன்). உமக்கு (தக்க) பதில் கிடைக்கும்” என்று (கூறிவிட்டுப் பதில்) சொன்னார்கள்” எனக் கூடுதலாக இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம்: 45