🔗

முஸ்லிம்: 5307

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

لَمَّا خَلَقَ اللهُ الْخَلْقَ، كَتَبَ فِي كِتَابِهِ، فَهُوَ عِنْدَهُ فَوْقَ الْعَرْشِ: إِنَّ رَحْمَتِي تَغْلِبُ غَضَبِي


பாடம் : 4

இறைவனின் கருணை விசாலமானது; அது அவனது கோபத்தை வென்றுவிட்டது.

5307. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் படைப்புகளைப் படைத்தபோது, தனது அரியணைக்கு மேலே தனக்கு அருகிலுள்ள தனது பதிவேட்டில் “என் கருணை என் கோபத்தை வெல்லும்” என்று எழுதினான்.- இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Book : 49