🔗

முஸ்லிம்: 5321

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«أَنَّ رَجُلًا مِنَ النَّاسِ رَغَسَهُ اللهُ مَالًا وَوَلَدًا» وَفِي حَدِيثِ التَّيْمِيِّ «فَإِنَّهُ لَمْ يَبْتَئِرْ عِنْدَ اللهِ خَيْرًا» قَالَ: فَسَّرَهَا قَتَادَةُ: لَمْ يَدَّخِرْ عِنْدَ اللهِ خَيْرًا، وَفِي حَدِيثِ شَيْبَانَ: «فَإِنَّهُ، وَاللهِ مَا ابْتَأَرَ عِنْدَ اللهِ خَيْرًا» وَفِي حَدِيثِ أَبِي عَوَانَةَ «مَا امْتَأَرَ» بِالْمِيمِ


5321. மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில் ஷைபான் மற்றும் அபூஅவானா (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில், “மக்களில் ஒருவருக்கு அல்லாஹ் செல்வத்தையும் பிள்ளைகளையும் வழங்கியிருந்தான்” என்று இடம்பெற்றுள்ளது.

முஅதமிர் பின் சுலைமான் அத்தைமீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “ஃப இன்னஹு லம் யப்தயிர் இந்தல்லாஹி கைரன்” என்பதற்கு “அவர் அல்லாஹ்விடம் எந்த நன்மையையும் சேமித்திருக்கவில்லை” என்று கத்தாதா (ரஹ்) அவர்கள் பொருள் செய்ததாக இடம் பெற்றுள்ளது.

(இதைக் குறிக்க) ஷைபான் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “ஃப இன்னஹு மப்தஅர இந்தல்லாஹி கைரன்” (அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் அல்லாஹ்விடம் எந்த நன்மையையும் சேமித்திருக்கவில்லை) என்றும்,அபூஅவானா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “மம்தஅர” (அவர் சேமித்திருக்கவில்லை) என்றும் காணப்படுகிறது.

Book : 49