«يُؤْتَى بِجَهَنَّمَ يَوْمَئِذٍ لَهَا سَبْعُونَ أَلْفَ زِمَامٍ، مَعَ كُلِّ زِمَامٍ سَبْعُونَ أَلْفَ مَلَكٍ يَجُرُّونَهَا»
பாடம்: 13
நரக நெருப்பின் கடுமையான வெப்பமும், அதன் ஆழத்தின் அளவும், அது நரகவாசிகளைத் தீண்டும் அளவும்.
5464. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அன்றைய நாளில் நரகம் எழுபதாயிரம் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டுக் கொண்டு வரப்படும். ஒவ்வொரு சங்கிலியுடனும் எழுபதாயிரம் வானவர்கள் இருந்து, இழுத்து வருவார்கள்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)
அத்தியாயம்: 51