«رَأَيْتُ عَمْرَو بْنَ لُحَيِّ بْنِ قَمْعَةَ بْنِ خِنْدِفَ أَبَا بَنِي كَعْبٍ هَؤُلَاءِ، يَجُرُّ قُصْبَهُ فِي النَّارِ»
5485. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இதோ இந்த பனூ கஅப் குலத்தாரின் தந்தையான “அம்ர் பின் லுஹை பின் கம்ஆ பின் கிந்திஃப்” தனது குடலை இழுத்தபடி நரகத்தில் சென்றுகொண்டிருப்பதை நான் கண்டேன்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
Book : 51