🔗

முஸ்லிம்: 5762

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

كَانَتِ الْمَرْأَةُ تَطُوفُ بِالْبَيْتِ وَهِيَ عُرْيَانَةٌ

فَتَقُولُ : مَنْ يُعِيرُنِي تِطْوَافًا؟ تَجْعَلُهُ عَلَى فَرْجِهَا وَتَقُولُ : الْيَوْمَ يَبْدُو بَعْضُهُ أَوْ كُلُّهُ فَمَا بَدَا مِنْهُ فَلَا أُحِلُّهُ

فَنَزَلَتْ هَذِهِ الْآيَةُ : { خُذُوا زِينَتَكُمْ عِنْدَ كُلِّ مَسْجِدٍ }


பாடம்: 2

“நீங்கள் தொழுமிடங்கள் ஒவ்வொன்றிலும் உங்களது அலங்காரத்தை மேற்கொள்ளுங்கள்” (அல்குர்ஆன்: 7:31) எனும் இறைவசனத் தொடர்.

5762. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(அறியாமைக் காலப்) பெண்கள் இறையில்லம் கஅபாவை நிர்வாணமாகச் சுற்றி (தவாஃப்) வருவார்கள். அப்போது அவர்கள், “தவாஃப் ஆடையை இரவல் தருபவர் யார்?” என்று கூறி, (அதைப் பெற்று) தமது இன உறுப்பின் மீது வைத்துக்கொண்டு, பின்வருமாறு பாடுவார்கள்:

“இன உறுப்பில்

சிறிதளவோ முழுவதுமோ

வெளிப்படுகிறது

இந்நாள்.

இதை

எவரும் பார்க்க

அனுமதிக்க முடியாது

என்னால்”.

எனவேதான், “நீங்கள் தொழுமிடங்கள் ஒவ்வொன்றிலும் உங்களது அலங்காரத்தை மேற்கொள்ளுங்கள்” (அல்குர்ஆன்: 7:31) எனும் இறைவசனம் அருளப்பெற்றது.


இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம்: 54