🔗

முஸ்லிம்: 62

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

قُلْتُ: يَا رَسُولَ اللهِ، قُلْ لِي فِي الْإِسْلَامِ قَوْلًا لَا أَسْأَلُ عَنْهُ أَحَدًا بَعْدَكَ – وَفِي حَدِيثِ أَبِي أُسَامَةَ غَيْرَكَ – قَالَ: ” قُلْ: آمَنْتُ بِاللهِ، فَاسْتَقِمْ “


பாடம் : 13

இஸ்லாத்தின் அனைத்து விஷயங்களையும் உள்ளடக்கிக்கொண்ட அம்சம்.

62. சுஃப்யான் பின் அப்தில்லாஹ் அஸ்ஸகஃபீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் “அல்லாஹ்வின் தூதரே! இஸ்லாம் குறித்து (சுருக்கமாக) எனக்கு ஒரு விளக்கம் அளியுங்கள். “தங்களுக்குப் பிறகு யாரிடமும்” அல்லது “தங்களைத் தவிர வேறு யாரிடமும்” அது குறித்து நான் கேட்க வேண்டிய திருக்கலாகாது” என்று வினவினேன்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “”அல்லாஹ்வின் மீது நான் நம்பிக்கை கொண்டேன்” என்று கூறி, அதில் உறுதியாக நிலைத்து நிற்பீராக!” என்று சொன்னார்கள்.

இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 1