أَنَّ شَاةً، طُبِخَتْ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَعْطِنِي الذِّرَاعَ» فَنَاوَلَهَا إِيَّاهُ، فَقَالَ: «أَعْطِنِي الذِّرَاعَ» فَنَاوَلَهَا إِيَّاهُ، ثُمَّ قَالَ: «أَعْطِنِي الذِّرَاعَ» فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّمَا لِلشَّاةِ ذِرَاعَانِ قَالَ: «أَمَا إِنَّكَ لَوِ الْتَمَسْتَهَا لَوَجَدْتَهَا»
10706. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு ஆடு சமைக்கப்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “எனக்கு அதன் முன்னங்கால் ஒன்றை எடுத்துத் தாருங்கள்” என்று கூறினார்கள். (நபித்தோழர் ஒருவர்) அதை நபி (ஸல்) அவர்களிடம் கொடுத்தார். நபி (ஸல்) அவர்கள் மீண்டும், “எனக்கு அதன் முன்னங்கால் ஒன்றை எடுத்துத் தாருங்கள்” என்று கூறினார்கள். அதையும் அவர் கொடுத்தார்.
பிறகு நபி (ஸல்) அவர்கள், “எனக்கு அதன் முன்னங்கால் ஒன்றை எடுத்துத் தாருங்கள்” என்று கூறினார்கள். அதற்கு அந்த நபித்தோழர், “அல்லாஹ்வின் தூதரே! ஆட்டுக்கு இரண்டு முன்னங்கால்கள் தானே உள்ளன!” என்று கூறினார்.
நபி (ஸல்) அவர்கள், “(உறுதியாக) நீ அதைத் தேடியிருந்தால், (இன்னொன்றையும்) கண்டிருப்பாய்” என்று கூறினார்கள்.