«أَلَا أَدُلُّكَ عَلَى كَنْزٍ مِنْ كُنُوزِ الْجَنَّةِ؟» قُلْتُ: بَلَى. قَالَ: «لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ»
قَالَ: ” أَحْسِبُهُ قَالَ: «يَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ أَسْلَمَ عَبْدِي وَاسْتَسْلَمَ»
10736. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், “சொர்க்கத்தின் கருவூலங்களில் ஒரு கருவூலத்தை நான் உமக்கு அறிவிக்கட்டுமா?” என்று கேட்டார்கள். நான், “ஆம்” என்றேன். நபி (ஸல்) அவர்கள் அது, “லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்” (அல்லாஹ்வின் உதவியில்லாமல் (பாவங்களிலிருந்து) விலகிச் செல்லவோ (நல்லறங்கள் புரிய) ஆற்றல் பெறவோ (மனிதனால்) முடியாது) என்று கூறினார்கள்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
(இதைக் கூறுவதால்) மிகவும் கண்ணியமான, மகத்துவமிக்க அல்லாஹ், “என் அடியான் சரணடைந்தான், முற்றிலும் கீழ்ப்படிந்தான்” என்று கூறுகிறான் என நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என நான் கருதுகிறேன்.