سَأَلْنَا عَلِيًّا عَنْ تَطَوُّعِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالنَّهَارِ، قَالَ: قَالَ عَلِيٌّ: «تِلْكَ سِتَّ عَشْرَةَ رَكْعَةً تَطَوُّعُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالنَّهَارِ» ، وَقَلَّ مَنْ يُدَاوِمُ عَلَيْهَا ،
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، حَدَّثَنَي أَبِي حَدَّثَنَا وَكِيعٌ، قَالَ: وَقَالَ أَبِي: قَالَ حَبِيبُ بْنُ أَبِي ثَابِتٍ: «يَا أَبَا إِسْحَاقَ مَا أُحِبُّ أَنَّ لِي بِحَدِيثِكَ هَذَا مِلْءَ مَسْجِدِكَ هَذَا ذَهَبًا»
1208. ஆஸிம் பின் ளம்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அலீ (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்களின் பகல் நேர உபரியான தொழுகைகள் பற்றிக் கூறுங்கள்” என்று கேட்டோம்.
அதற்கவர்கள், நபி (ஸல்) அவர்கள் பகல் நேரத்தில் உபரியாக தொழும் தொழுகைகள் பதினாறு ரக்அத்களாகும். இதைத் தொடர்ந்து நிறைவேற்றுபவர்கள் மிகக் குறைவானவர்களே! என்று கூறினார்கள்.
வகீஉ பின் ஜர்ராஹ் (ரஹ்) அவர்கள் தனது தந்தை ஜர்ராஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்:
அபூஇஸ்ஹாக் அவர்கள் இதை ஹபீப் பின் அபூஸாபித் அவர்களுக்கு அறிவித்தபோது அவர், “அபூஇஸ்ஹாக் அவர்களே! உங்களது இந்த ஹதீஸ் உங்களது பள்ளிவாசல் நிரம்பத் தங்கம் இருப்பதற்கு சமமானது” என்று கூறினார்.