🔗

முஸ்னது அஹ்மத்: 12251

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَخَذَتْ أُمُّ سُلَيْمٍ بِيَدِي مَقْدَمَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ، فَأَتَتْ بِي رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، هَذَا ابْنِي وَهُوَ غُلَامٌ كَاتِبٌ، قَالَ: ” فَخَدَمْتُهُ تِسْعَ سِنِينَ، فَمَا قَالَ لِي لِشَيْءٍ قَطُّ صَنَعْتُهُ: أَسَأْتَ، أَوْ: بِئْسَ مَا صَنَعْتَ


12251. அனஸ் பின் மாலிக்  (ரலி) அவர்கள் கூறியதாவது:

என்னுடைய தாயார் உம்மு ஸுலைம் (ரலி அவர்கள் நபி  (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்த நேரத்தில் என்னை அழைத்துச் சென்று , அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே! இந்த சிறுவன்  அனஸ் என்னுடைய மகன், எழுததெரிந்தவன் என்று கூறி (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு பணிவிடை செய்ய) ஒப்படைத்தார்கள்.

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஒன்பது ஆண்டுகள் பணிவிடை செய்துள்ளேன். நான் செய்த எதைப் பற்றியும் அவர்கள் இதை நீ சரியாக செய்யவில்லை என குறை கூறியதில்லை.