🔗

முஸ்னது அஹ்மத்: 13034

ஹதீஸின் தரம்: Pending

خَدَمْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَشْرَ سِنِينَ، لَا وَاللَّهِ مَا سَبَّنِي سَبَّةً قَطُّ، وَلَا قَالَ لِي: أُفٍّ قَطُّ، وَلَا قَالَ لِي لِشَيْءٍ فَعَلْتُهُ: لِمَ فَعَلْتَهُ، وَلَا لِشَيْءٍ لَمْ أَفْعَلْهُ: أَلَّا فَعَلْتَهُ


13034. அனஸ் பின் மாலிக்  (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு பத்து ஆண்டுகள் பணிவிடை செய்துள்ளேன். அல்லாஹ்வின் மீதாணையாக!  அவர்கள் ஒருபோதும் என்னை திட்டியதில்லை. ஒருபோதும் “சீ” என்று கூறியதில்லை.

நான் செய்த எதைப் பற்றியும் “இன்னின்னதை நீ ஏன் செய்தாய்?” என்றோ, நான் செய்யாமல் விட்டுவிட்ட எதைப் பற்றியும் “நீ இன்னின்னதைச் செய்திருக்கக் கூடாதா?” என்றோ அவர்கள் என்னிடம் கூறியதில்லை.