🔗

முஸ்னது அஹ்மத்: 13181

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

دَخَلْنَا عَلَى أَنَسِ بْنِ مَالِكٍ فِي رَهْطٍ مِنْ أَهْلِ الْمَدِينَةِ، قَالَ: صَلَّيْتُمْ يَعْنِي – الْعَصْرَ -؟ قَالُوا: نَعَمْ، قُلْنَا أَخْبِرْنَا أَصْلَحَكَ اللَّهُ، مَتَى كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي هَذِهِ الصَّلَاةَ؟ قَالَ: «كَانَ يُصَلِّيهَا وَالشَّمْسُ بَيْضَاءُ نَقِيَّةٌ»


13181. அப்துர்ரஹ்மான் பின் வர்தான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள், மதீனாவாசிகளின் ஒரு கூட்டத்தில் சேர்ந்து அனஸ் (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அனஸ் (ரலி) அவர்கள் அந்தக் கூட்டத்தினரிடம், “நீங்கள் அஸர் தொழுகை தொழுதுவிட்டீர்களா? என்று கேட்க அவர்கள், “ஆம்” (தொழுது விட்டோம்) என்று பதிலளித்தனர். நாங்கள் அல்லாஹ் உங்களை சீர்படுத்துவானாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த அஸர் தொழுகையை எப்போது தொழுவார்கள் ? என்று கேட்டோம். அதற்கவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சூரியன் (வானில்) வெண்மையாக, தெளிவாக இருக்கும் போது அஸர் தொழுவார்கள்” என்று பதிலளித்தார்.