كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي بِنَا الْعَصْرَ وَالشَّمْسُ بَيْضَاءُ مُحَلِّقَةٌ، ثُمَّ أَرْجِعُ إِلَى قَوْمِي وَهُمْ فِي نَاحِيَةِ الْمَدِينَةِ، فَأَجِدُهُمْ جُلُوسًا، فَأَقُولُ لَهُمْ: قُومُوا فَصَلُّوا، فَإِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ صَلَّى
13434. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு அஸர் தொழுகை நடத்துவார்கள். அப்போது சூரியன் (வானில்) வெண்மையாகவும், வட்டமாகவும் (உயர்ந்தே) இருக்கும்.
நான் மதீனாவின் (கடைசி) ஓரத்தில் இருக்கும் எனது குடும்பத்தினரிடமும், உறவினர்களிடமும் செல்லும் போது அவர்கள் அமர்ந்திருப்பதைக் காண்பேன். அவர்களிடம், “நீங்கள் எழுந்து தொழுங்கள்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதுவிட்டார்கள்” என்று கூறுவேன்.