🔗

முஸ்னது அஹ்மத்: 13622

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ وَلَهُمْ يَوْمَانِ يَلْعَبُونَ فِيهِمَا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَا هَذَانِ الْيَوْمَانِ؟ قَالُوا: كُنَّا نَلْعَبُ فِيهِمَا فِي الْجَاهِلِيَّةِ، قَالَ: ” إِنَّ اللَّهَ قَدْ أَبْدَلَكُمْ بِهِمَا خَيْرًا مِنْهُمَا: يَوْمَ الْفِطْرِ، وَيَوْمَ النَّحْرِ


13622. நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த காலகட்டத்தில் மதீனாவாசிகள் இரண்டு நாட்களை தேர்வு செய்து அதிலே விளையாடுபவர்களாக இருந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் இது என்ன நாட்கள்? என்று கேட்டார்கள். அறியாமைக் காலத்திலிருந்து இந்த இரண்டு நாட்களில்தான் விளையாடிக் கொண்டு வருகிறோம் என்று அவர்கள் சொன்னார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் இதற்கு பதிலாக நோன்பு பெருநாள், ஹஜ் பெருநாள் என்ற இரண்டு நாட்களை (விளையாடுவதற்காக) அல்லாஹ் உங்களுக்கு வழங்கியுள்ளான் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)