🔗

முஸ்னது அஹ்மத்: 13826

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَادَ رَجُلًا مِنَ الْأَنْصَارِ، فَقَالَ: ” يَا خَالُ، قُلْ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ “، قَالَ: خَالٌ أَمْ عَمٌّ؟ قَالَ: «بَلْ خَالٌ» ، قَالَ: وَخَيْرٌ لِي أَنْ أَقُولَهَا؟ قَالَ: «نَعَمْ»


13826. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அன்சாரிகளில் ஒருவரை நோய் விசாரிக்கச் சென்ற போது (அவரை நோக்கி) மாமாவே! லாயிலாஹ இல்லல்லாஹ் எனச் சொல்வீராக! எனக் கூறினார்கள். அதற்கு அம்மனிதர் (நான் உங்களுக்கு) மாமாவா? சிறிய தந்தையா? என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நீங்கள் மாமா தான் எனக் கூறினார்கள். பிறகு அவர் ‘லாயிலாஹ இல்லல்லாஹ் என்று கூறுவது எனக்கு நன்மை பயக்குமா?’ என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘ஆம்’ என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)