سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، قُلْتُ: صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى ابْنِهِ إِبْرَاهِيمَ؟ قَالَ: «لَا أَدْرِي، رَحْمَةُ اللَّهِ عَلَى إِبْرَاهِيمَ، لَوْ عَاشَ كَانَ صِدِّيقًا نَبِيًّا»
قَالَ: قُلْتُ: كَيْفَ أَنْصَرِفُ إِذَا صَلَّيْتُ عَنْ يَمِينِي، أَوْ عَنْ يَسَارِي؟ قَالَ: «أَمَّا أَنَا فَرَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْصَرِفُ عَنْ يَمِينِهِ»
13985. இஸ்மாயீல் அஸ்ஸுத்தீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அனஸ் (ரலி) அவர்களிடம், நபி (ஸல்) அவர்கள் தனது மகன் இப்ராஹீம், மரணித்த போது அவருக்கு ஜனாஸாத் தொழுகை நடத்தினார்களா? என்று கேட்டேன்.
அதற்கு அவர்கள், ” எனக்குத் தெரியாது. இப்ராஹீம் அவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக! அவர் உயிரோடு இருந்திருந்தால் மிக்க உண்மையாளராகவும், நபியாகவும் இருந்திருப்பார் என்று பதிலளித்தார்கள்.
மேலும் இஸ்மாயீல் அஸ்ஸுத்தீ (ரஹ்) அவர்கள் கூறினார்:
நான், அனஸ் (ரலி) அவர்களிடம், நான் தொழுத பின் வலப்பக்கம் திரும்ப வேண்டுமா? அல்லது இடப்பக்கம் திரும்ப வேண்டுமா? என்றுக் கேட்டேன். அதற்கு அவர்கள், நபி (ஸல்) அவர்கள் (தொழுது முடித்த பின்) தமது வலப் பக்கம் திரும்புவதை பார்த்திருக்கிறேன் என்று பதிலளித்தார்கள்.