🔗

முஸ்னது அஹ்மத்: 16187

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«ضَحِكَ رَبُّنَا مِنْ قُنُوطِ عَبْدِهِ، وَقُرْبِ غِيَرِهِ» قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَوَيَضْحَكُ الرَّبُّ عَزَّ وَجَلَّ؟ قَالَ: «نَعَمْ» قَالَ: لَنْ نَعْدَمَ مِنْ رَبٍّ يَضْحَكُ خَيْرًا


16187. தனது அடியார்கள், நிராசையடைவதையும் அவர்களின் நிலையை சீக்கிரம் மாற்ற இருப்பதையும் (நினைத்து) நம்முடைய இறைவன் சிரிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நான், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே! இறைவன் சிரிப்பானா! என்று (ஆச்சரியத்துடன்) கேட்டேன். அதற்வகவர்கள், “ஆம்” என்று பதிலளித்தார்கள். உடனே நான், சிரிக்கும் இறைவனிடமிருந்து நாம் நன்மையை இழந்துவிடமாட்டோம் என்று கூறினேன்.

அறிவிப்பவர்: அபூரஸீன் (லகீத் பின் ஆமிர்-ரலி)