«مَنْ قُتِلَ دُونَ مَالِهِ فَهُوَ شَهِيدٌ، وَمَنْ ظَلَمَ مِنَ الأَرْضِ شِبْرًا طُوِّقَهُ مِنْ سَبْعِ أَرَضِينَ»
1628. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் தன்னுடைய பொருளை பாதுகாப்பதற்காக போரிட்டு கொல்லப்படுகிறாரோ அவர் ஷஹீதாவார்.
ஒரு சாண் அளவு நிலத்தை யார் அநியாயமாக அபகரிக்கிறாரோ, அவரது கழுத்தில் அல்லாஹ் மறுமை நாளில் அந்த நிலத்தி(ன் மேற்பகுதியி)லிருந்து ஏழு பூமிகள்வரை (செல்லும் பகுதியை) மாலையாக மாட்டுவான்.
அறிவிப்பவர்: ஸயீத் பின் ஸைத் (ரலி)
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஸுஃப்யான் (ரஹ்) அவர்கள் கூறினார்:
ஸுஹ்ரீ அவர்களிடமிருந்து இந்த ஹதீஸை இவ்வாறே (இரண்டு பகுதியாக) நாங்கள் மனனமிட்டுள்ளோம்.