🔗

முஸ்னது அஹ்மத்: 16297

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَنَّهُ خَرَجَ وَافِدًا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: فَصَلَّيْنَا خَلْفَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمَحَ بِمُؤْخِرِ عَيْنِهِ إِلَى رَجُلٍ لَا يُقِيمُ صُلْبَهُ فِي الرُّكُوعِ وَالسُّجُودِ، فَلَمَّا انْصَرَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «يَا مَعْشَرَ الْمُسْلِمِينَ، إِنَّهُ لَا صَلَاةَ لِمَنْ لَا يُقِيمُ صُلْبَهُ فِي الرُّكُوعِ وَالسُّجُودِ»

قَالَ: وَرَأَى رَجُلًا يُصَلِّي خَلْفَ الصَّفِّ، فَوَقَفَ حَتَّى انْصَرَفَ الرَّجُلُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اسْتَقْبِلْ صَلَاتَكَ، لَا صَلَاةَ لِرَجُلٍ فَرْدٍ خَلْفَ الصَّفِّ» ، قَالَ عَبْدُ الصَّمَدِ: «فَرْدًا خَلْفَ الصَّفِّ» فَقَالَ لَهُ «اسْتَقْبِلْ صَلَاتَكَ، فَلَا صَلَاةَ لِفَرْدٍ خَلْفَ الصَّفِّ»


16297. அலீ பின் ஷைபான் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் தூதுக்குழுவுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தேன். (பிறகு) நாங்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் தொழுதோம். நபி (ஸல்) அவர்கள் தனது கடைக்கண்ணால், ருகூஃ, ஸஜ்தாவில் தனது முதுகை சரியாக நிமிர்த்தாத ஒரு மனிதரைக் கவனித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்ததும், “முஸ்லிம்களே! ருகூஃ, ஸஜ்தாவில் தனது முதுகை சரியாக நிமிர்த்தாதவருக்கு தொழுகை இல்லை” என்று கூறினார்கள்.

(மற்றொரு நாள்) ஒரு மனிதர் வரிசைக்கு பின்னால் தனித்துத் தொழுவதை நபி (ஸல்) அவர்கள் கண்டார்கள். அந்த மனிதர் தனது தொழுகையை முடிக்கும் வரை நபி (ஸல்) அவர்கள் காத்திருந்தார்கள். பின்னர் அவரிடம், “உமது தொழுகையை மீண்டும் தொழுவீராக! வரிசைக்கு பின்னால் தனித்துத் தொழுபவருக்குத் தொழுகை இல்லை” என்று கூறினார்கள்.