🔗

முஸ்னது அஹ்மத்: 16393

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأُقِيمَتِ الصَّلَاةُ فَجَلَسْتُ، فَلَمَّا صَلَّى قَالَ لِي: «أَلَسْتَ بِمُسْلِمٍ؟» ، قُلْتُ: بَلَى، قَالَ: «فَمَا مَنَعَكَ أَنْ تُصَلِّيَ مَعَ النَّاسِ؟» ، قَالَ: قُلْتُ: صَلَّيْتُ فِي أَهْلِي، قَالَ: «فَصَلِّ مَعَ النَّاسِ وَلَوْ كُنْتَ قَدْ صَلَّيْتَ فِي أَهْلِكَ»


16393. அபூ மிஹ்ஜன் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். (அப்போது) தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டது. நான் அமர்ந்தேன். நபி (ஸல்) தொழுது முடித்ததும் என்னிடம், ‘நீர் முஸ்லிம் இல்லையா?’ என்று கேட்டார்கள். நான், ‘இல்லை, நான் முஸ்லிம் தான்!’ என்றேன். அதற்கு அவர்கள், ‘மக்கள் இமாமுடன் தொழுது கொண்டிருக்கும்போது நீர் ஏன் தொழவில்லை?’ என்று கேட்டார்கள். நான், ‘நான் என் வீட்டிலேயே தொழுதுவிட்டேன்’ என்று கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘நீர் உன் வீட்டிலேயே தொழுதுவிட்டாலும், மக்களுடன் (ஜமாஅத்தாக) தொழு!’ என்று கூறினார்கள்.