قَدِمْتُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَسْلَمْتُ، قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، اجْعَلْ لِقَوْمِي مَا أَسْلَمُوا عَلَيْهِ مِنْ أَمْوَالِهِمْ . «فَفَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَاسْتَعْمَلَنِي عَلَيْهِمْ» ، ثُمَّ اسْتَعْمَلَنِي أَبُو بَكْرٍ، ثُمَّ اسْتَعْمَلَنِي عُمَرُ مِنْ بَعْدِهِ
16728. ஸஃத் பின் அபூதுபாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து இஸ்லாத்தை ஏற்றேன். அப்போது, “அல்லாஹ்வின் தூதரே! என் கூட்டத்தார் இஸ்லாத்தை ஏற்றால் அவர்களிடம் இருந்த செல்வங்களை (நிலம் மற்றும் உடைமைகளை) அவர்களுக்கே உரியதாக்கி விடுங்கள்” என்று கோரினேன். அவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்தார்கள்.
மேலும், எனது கூட்டத்தார்களை நிர்வகிக்கும் பொறுப்பில் என்னையே நியமித்தார்கள். நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு அபூபக்கர் (ரலி) அவர்களும், அவர்களுக்குப் பிறகு உமர் (ரலி) அவர்களும் என்னையே அந்தப் பொறுப்பில் நீடிக்கச் செய்தார்கள்.