🔗

முஸ்னது அஹ்மத்: 16740

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ: «اللَّهُ أَكْبَرُ كَبِيرًا، وَالْحَمْدُ لِلَّهِ كَثِيرًا، وَسُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ بُكْرَةً وَأَصِيلًا، اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ مِنْ هَمْزِهِ وَنَفْخِهِ وَنَفْثِهِ» قَالَ: قُلْتُ: مَا هَمْزُهُ؟ قَالَ: فَذَكَرَ كَهَيْئَةِ الْمُوتَةِ – يَعْنِي يَصْرَعُ -. قُلْتُ: فَمَا نَفْخُهُ؟ قَالَ: «الْكِبْرُ» قُلْتُ: فَمَا نَفْثُهُ؟، قَالَ: «الشِّعْرُ»


16740. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அல்லாஹு அக்பர் கபீரா!வல்ஹம்துலில்லாஹி கஸீரா! வ ஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹீ புக்ரதவ் வ அஸீலா, அவூது பில்லாஹி மினஷ்ஷைத்தானிர்ரஜீம், மின் ஹம்ஸிஹீ, வ நஃப்கிஹீ, வ நஃப்ஸிஹீ…என்று பிரார்த்தனை செய்வார்கள்.

(துஆவின் பொருள்: அல்லாஹ் மிகப்பெரியவன்! அதிகமதிகமான புகழ் அல்லாஹ்வுக்கே உரியது! காலையிலும் மாலையிலும் நான் அல்லாஹ்வைத் தூய்மைப்படுத்துகிறேன்; புகழ்கிறேன். விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும், அவனுடயை தீய தூண்டுதல், துப்புதல், ஊதுதல் போன்றவற்றை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுகிறேன்.)

நான் ஷைத்தானின் தீய தூண்டுதல் என்றால் என்ன? என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், பைத்தியம் பிடித்தல் என்று விளக்கினார்கள். அவனுடைய துப்புதல் என்றால் என்ன? என்று கேட்டேன். அதற்கவர்கள், பெருமை என்று கூறினார்கள். அவனுடயை ஊதுதல் என்றால் என்ன? என்று கேட்டேன். அதற்கவர்கள் கவிதை என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஜுபைர் பின் முத்இம் (ரலி)