«لَا تُجْزِئُ صَلَاةٌ لِرَجُلٍ أَوْ لِأَحَدٍ لَا يُقِيمُ ظَهْرَهُ فِي الرُّكُوعِ وَالسُّجُودِ»
17073. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ருகூவிலும், ஸுஜூதிலும் தமது முதுகுத் தண்டை (வளைவின்றி) நேராக ஆக்காதவருக்கு தொழுகை கூடாது.
அறிவிப்பவர் : அபூமஸ்வூத் அன்சாரி (ரலி)