🔗

முஸ்னது அஹ்மத்: 17142

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

وَعَظَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَوْعِظَةً ذَرَفَتْ مِنْهَا الْعُيُونُ، وَوَجِلَتْ مِنْهَا الْقُلُوبُ، قُلْنَا: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ هَذِهِ لَمَوْعِظَةُ مُوَدِّعٍ، فَمَاذَا تَعْهَدُ إِلَيْنَا؟ قَالَ: «قَدْ تَرَكْتُكُمْ عَلَى الْبَيْضَاءِ لَيْلُهَا كَنَهَارِهَا لَا يَزِيغُ عَنْهَا بَعْدِي إِلَّا هَالِكٌ، وَمَنْ يَعِشْ مِنْكُمْ، فَسَيَرَى اخْتِلَافًا كَثِيرًا، فَعَلَيْكُمْ بِمَا عَرَفْتُمْ مِنْ سُنَّتِي وَسُنَّةِ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ الْمَهْدِيِّينَ،

وَعَلَيْكُمْ بِالطَّاعَةِ، وَإِنْ عَبْدًا حَبَشِيًّا عَضُّوا عَلَيْهَا بِالنَّوَاجِذِ،

فَإِنَّمَا الْمُؤْمِنُ كَالْجَمَلِ الْأَنِفِ حَيْثُمَا انْقِيدَ انْقَادَ»


17142. இர்பாள் பின் ஸாரியா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடையே சொற்பொழிவு ஒன்றை நிகழ்த்தினார்கள். அதைக் கேட்டு எங்கள் கண்கள் கண்ணீரைச் சிந்தின; (எங்கள்) உள்ளங்கள் எல்லாம் அஞ்சி நடுங்கின. அப்போது நாங்கள் “இது விடைபெற்றுச் செல்லும் ஒருவர் கூறும் அறிவுரை போன்றுள்ளது. அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் எங்களிடம் இறுதி விருப்பமாக என்ன சொல்லப் போகிறீர்கள்?” என்று கேட்டோம்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நான் உங்களை வெண்மையான வழியில் விட்டுச் செல்கின்றேன். அதனுடைய இரவும் பகலைப் போன்றதாகும். அழியக் கூடியவனைத் தவிர வேறு யாரும் எனக்குப் பிறகு அதை விட்டும் வழி தவற மாட்டார்கள்.

உங்களில் எனக்குப் பின்னால் வாழ்பவர்கள் அதிகமான கருத்து வேறுபாடுகளைக் காண்பர். (மார்க்க அடிப்படையற்ற) இவ்விஷயங்களை சந்திக்கும் உங்களில் ஒருவர் எனது வழிமுறையையும் நல்வழி காட்டப்பெற்ற நேர்வழி கலீஃபாக்களின் வழிமுறையையும் கடைப்பிடிக்கட்டும்.

கறுப்பு நிற (நீக்ரோ) அடிமை உங்களுக்கு ஆட்சியாளராக ஆக்கப்பட்டாலும் அவருடைய சொல்லைச் செவியேற்று அதற்குக் கீழ்ப்படிந்து நடக்குமாறும், (அவரின் கட்டளையை) கடைவாய்ப் பற்களால் இறுகப் பற்றிக்கொள்ளுமாறும் உங்களுக்கு நான் அறிவுறுத்துகிறேன்.

ஏனெனில் இறைநம்பிக்கையாளர் என்பவர், (சத்தியத்துக்கு கட்டுப்படுவதில்) செலுத்தப்படும் இடம் நோக்கி (செம்மையாகச்) செல்லும், கடிவாளமுள்ள ஒட்டகத்தைப் போன்றவர் ஆவார்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின் அம்ர் (ரஹ்)