🔗

முஸ்னது அஹ்மத்: 17333

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

” كُلُّ امْرِئٍ فِي ظِلِّ صَدَقَتِهِ حَتَّى يُفْصَلَ بَيْنَ النَّاسِ – أَوْ قَالَ: يُحْكَمَ بَيْنَ النَّاسِ – “

قَالَ يَزِيدُ: «وَكَانَ أَبُو الْخَيْرِ لَا يُخْطِئُهُ يَوْمٌ إِلَّا تَصَدَّقَ فِيهِ بِشَيْءٍ وَلَوْ كَعْكَةً أَوْ بَصَلَةً أَوْ كَذَا»


17333. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(மறுமைநாளின் மஹ்ஷர் பெருவெளியில்) மக்களுக்கு தீர்ப்பளிக்கப்படும் வரை ஒவ்வொருவரும், (உலகில் தான்) செய்த தர்மத்தின் நிழலில் இருப்பார்கள்.

அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான யஸீத் பின் அபூஹபீப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அபுல் கைர் (ரஹ்) அவர்கள், ஏதேனும் தவறுசெய்தால் அந்த நாளில் எதையாவது தர்மம் செய்துவிடுவார். அது கேக் போன்ற இனிப்பான உணவுப் பொருளாக இருந்தாலும் அல்லது வெங்காயமாக இருந்தாலும் அல்லது இதுபோன்று வேறு எதுவாக இருந்தாலும் சரியே! (அதை தர்மம் செய்துவிடுவார்).