وَلَدَ جَدِّي غُلَامًا، فَسَمَّاهُ عَزِيزًا، فَأَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: وُلِدَ لِي غُلَامٌ، قَالَ: «فَمَا سَمَّيْتَهُ؟» قَالَ: قُلْتُ: عَزِيزًا. قَالَ: «لَا، بَلْ هُوَ عَبْدُ الرَّحْمَنِ» . قَالَ: فَهُوَ أَبِي
17608. கைஸமா பின் அப்துர்ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
எனது பாட்டனார் (அபூஸப்ரா என்ற யஸீத் பின் மாலிக்-ரலி) (அவரின் மனைவியின் மூலம்) ஒரு ஆண்குழந்தையைப் பெற்றபோது அதற்கு அஸீஸ் (மிகைத்தவர்) என்று பெயர் சூட்டி, நபி (ஸல்) அவர்களிடம் வந்து எனக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளது என்று கூறினார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், (குழந்தைக்கு) என்ன பெயர் வைத்தீர்கள்? என்று கேட்டார்கள். எனது பாட்டனார் அஸீஸ் (மிகைத்தவர்) என்று பெயர் வைத்தேன் எனக் கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் இல்லை. அவருக்கு, அப்துர் ரஹ்மான் (அளவற்ற அருளாளனின் அடிமை) என்ற பெயர் இருக்கட்டும் என்று கூறினார்கள். அவர்தான் என் தந்தை அப்துர்ரஹ்மான்.