🔗

முஸ்னது அஹ்மத்: 18154

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

خَطَبْتُ امْرَأَةً، فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنَظَرْتَ إِلَيْهَا؟» قُلْتُ: لَا قَالَ: «فَانْظُرْ إِلَيْهَا، فَإِنَّهُ أَحْرَى أَنْ يُؤْدَمَ بَيْنَكُمَا»


18154. முகீரா பின் ஷுஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான், நபி (ஸல்) அவர்களின் காலத்தில் (இருக்கும் போது)  அவர்களிடம் சென்று எனக்கு மணம் பேசி முடிக்கப்பட்ட செய்தியைக் கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘நீ அந்தப் பெண்ணைப் பார்த்தாயா?’ என்று கேட்டார்கள். அதற்கு நான் இல்லை என்று கூறினேன். உடனே நபி (ஸல்) அவர்கள், ‘பெண்ணை நீ போய் பார். அது உங்கள் இருவருக்கிடையில் நட்பு வளருவதற்குச் சிறந்ததாக இருக்கும்’ என்று கூறினார்கள்.