كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِذَا أَرَادَ أَنْ يَنَامَ، تَوَسَّدَ يَمِينَهُ، وَيَقُولُ: «اللَّهُمَّ قِنِي عَذَابَكَ يَوْمَ تَجْمَعُ عِبَادَكَ»
قَالَ: فَقَالَ أَبُو إِسْحَاقَ، وَقَالَ الْآخَرُ: «يَوْمَ تَبْعَثُ عِبَادَكَ»
18472. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உறங்கச் செல்லும் போது, தமது வலது கையைத் தலையணையாக வைத்துக் கொண்டு (வலது பக்கமாகச் சாய்ந்து படுத்து), “அல்லாஹும்ம கினீ அதாபக யவ்ம தஜ்மஉ இபாதக” என்று கூறுவார்கள்.
(பொருள்: அல்லாஹ்வே! உனது அடியார்களை நீ ஒன்றுதிரட்டும் நாளில் உனது தண்டனையிலிருந்து என்னைக் காப்பாயாக!)
அறிவிப்பாளர்களில் ஒருவர் (அதாவது ஷுஅபா) கூறுகிறார்:
இதை அறிவிக்கும் அபூஉபைதா (ரஹ்) அவர்கள், “யவ்ம தஜ்மஉ-ஒன்றுதிரட்டும் நாள்” என்று அறிவித்தார். வேறு சிலர், “யவ்ம தப்அஸு-எழுப்பும் நாள்”என்று அறிவித்தனர் என்று அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.