🔗

முஸ்னது அஹ்மத்: 19134

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

جَاءَ رَجُلٌ وَنَحْنُ فِي الصَّفِّ خَلْفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَدَخَلَ فِي الصَّفِّ فَقَالَ: اللَّهُ أَكْبَرُ كَبِيرًا، وَسُبْحَانَ اللَّهِ بُكْرَةً وَأَصِيلًا، قَالَ: فَرَفَعَ الْمُسْلِمُونَ رُءُوسَهُمْ وَاسْتَنْكَرُوا الرَّجُلَ، وَقَالُوا: مَنِ الَّذِي يَرْفَعُ صَوْتَهُ فَوْقَ صَوْتِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَلَمَّا انْصَرَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ هَذَا الْعَالِي الصَّوْتَ؟» فَقِيلَ: هُوَ ذَا يَا رَسُولَ اللَّهِ، فَقَالَ: «وَاللَّهِ لَقَدْ رَأَيْتُ كَلَامَكَ يَصْعَدُ فِي السَّمَاءِ حَتَّى فُتِحَ بَابٌ، فَدَخَلَ فِيهِ»


19134. அப்துல்லாஹ் பின் அபூஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு பின்னால் (தொழுகையின்) வரிசையில் நின்றிருந்தபோது ஒரு மனிதர் வரிசையில் சேர்ந்து “அல்லாஹு அக்பர் கபீரா, வ ஸுப்ஹானல்லாஹி புக்ரதவ் வ அஸீலா” (பொருள்: அல்லாஹ் மிகப் பெரியவன் என்று பெருமைப்படுத்துகிறேன். அல்லாஹ் பரிசுத்தமானவன் என்று காலையிலும் மாலையிலும் அவனைத் துதிக்கிறேன்) என்று கூறினார்.

அப்போது முஸ்லிம்கள் தலையை உயர்த்தி அவரை கண்டித்தனர். மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் சப்தத்தை விட தனது சப்தத்தை உயர்த்துவது யார்? என்றும் கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தொழுகையை முடித்த பின், திரும்பி “யார் இப்படி உரத்த சத்தமிட்டது என்று கேட்டார்கள். இன்ன மனிதர் என்று அவர்களிடம் கூறப்பட்டது. அப்போது, அவரைப் பார்த்து “அல்லாஹ்வின் மீதாணையாக! உன்னுடைய வார்த்தை மேல்நோக்கி சென்றது. அதற்காக ஒரு கதவு திறக்கப்பட அதில் நுழைந்துக்கொண்டது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.