🔗

முஸ்னது அஹ்மத்: 19624

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«الْمُؤْمِنُ لِلْمُؤْمِنِ كَالْبُنْيَانِ يَشُدُّ بَعْضُهُ بَعْضًا، وَمَثَلُ الْجَلِيسِ الصَّالِحِ مَثَلُ الْعَطَّارِ إِنْ لَمْ يُحْذِكَ مِنْ عِطْرِهِ عَلَقَكَ مِنْ رِيحِهِ، وَمَثَلُ الْجَلِيسِ السُّوءِ مَثَلُ الْكِيرِ إِنْ لَمْ يُحْرِقْكَ نَالَكَ مِنْ شَرَرِهِ. وَالْخَازِنُ الْأَمِينُ الَّذِي يُؤَدِّي مَا أُمِرَ بِهِ مُؤْتَجِرًا أَحَدُ الْمُتَصَدِّقِينَ»


19624. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“ஓர் இறைநம்பிக்கையாளர் மற்றொரு இறைநம்பிக்கையாளருக்கு ஒரு கட்டடத்தைப் போன்றவர் ஆவார். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதியை வலுப்படுத்துகிறது.”

“நல்ல நண்பனுக்கு உதாரணம் நறுமணம் விற்பவரைப் போன்றதாகும். அவர் உமக்கு அந்த நறுமணத்தை விலையின்றித் தராவிட்டாலும், அவருடைய நறுமணம் உம்மிடம் ஒட்டிக்கொள்ளும். தீய நண்பனுக்கு உதாரணம் கொல்லனின் துருத்தியைப் போன்றதாகும். அது உமது ஆடையைச் சுட்டெரிக்காவிட்டாலும், அதிலிருந்து வெளிப்படும் தீப்பொறி உம்மீது படும்.”

“தனக்குக் கட்டளையிடப்பட்டதை நன்மையை எதிர்பார்த்து (மன உவப்போடு) முழுமையாகக் கொடுத்துவிடும் நம்பிக்கையான (கருவூலப்) பொருளாளர், தர்மம் செய்தவர்களில் ஒருவராவார்.”

அறிவிப்பவர்: அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி)