🔗

முஸ்னது அஹ்மத்: 19667

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا جَاءَهُ السَّائِلُ أَوْ ذُو الْحَاجَةِ قَالَ: «اشْفَعُوا تُؤْجَرُوا، وَلْيَقْضِ اللَّهُ عَزَّ وَجَلَّ عَلَى لِسَانِ رَسُولِهِ مَا شَاءَ» . وَقَالَ: «الْمُؤْمِنُ لِلْمُؤْمِنِ كَالْبُنْيَانِ يَشُدُّ بَعْضُهُ بَعْضًا» . وَقَالَ: «الْخَازِنُ الْأَمِينُ الَّذِي يُؤَدِّي مَا أُمِرَ بِهِ طَيِّبَةً بِهِ نَفْسُهُ أَحَدُ الْمُتَصَدِّقِينَ»


19667. அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஏதேனும் ஒரு யாசகரோ அல்லது தேவையுடையவரோ வந்தால், அவர்கள் (தம் தோழர்களை நோக்கி), “நீங்கள் (இவருக்காகப் பரிந்துரை செய்யுங்கள்; அதற்கான நன்மையை நீங்கள் பெறுவீர்கள். மேலும், அல்லாஹ், தன் தூதரின் நாவின் வழியாக தான் நாடியதைத் தீர்மானிக்கிறான்” என்று கூறுவார்கள்.

மேலும் அவர்கள் கூறினார்கள்: “ஓர் இறைநம்பிக்கையாளர் மற்றொரு இறைநம்பிக்கையாளருக்கு ஒரு கட்டடத்தைப் போன்றவர் ஆவார். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதியை வலுப்படுத்துகிறது.”

மேலும் அவர்கள் கூறினார்கள்: “தனக்குக் கட்டளையிடப்பட்டதை மன உவப்போடு முழுமையாகக் கொடுத்துவிடும் நம்பிக்கையான (கருவூலப்) பொருளாளர், தர்மம் செய்தவர்களில் ஒருவராவார்.”