«إِذَا حَدَّثْتُكَ حَدِيثًا، فَلَا تَزِيدَنَّ عَلَيَّ»
وَقَالَ: ” أَرْبَعٌ مِنْ أَطْيَبِ الْكَلَامِ، وَهُنَّ مِنَ الْقُرْآنِ، لَا يَضُرُّكَ بِأَيِّهِنَّ بَدَأْتَ: سُبْحَانَ اللَّهِ، وَالْحَمْدُ لِلَّهِ، وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ “
ثُمَّ قَالَ: «لَا تُسَمِّيَنَّ غُلَامَكَ أَفْلَحَ، وَلَا نَجِيحًا، وَلَا رَبَاحًا، وَلَا يَسَارًا»
20126. நபி (ஸல்) அவர்கள், “நான் உமக்கு ஒரு ஹதீஸைக் கூறினால், அதில் எதையும் அதிகப்படுத்த வேண்டாம்” என்று கூறிவிட்டு, பின்வருமாறு கூறினார்கள்:
நான்கு வார்த்தைகள் மிகச் சிறந்த பேச்சுகளாகும், அவை குர்ஆனிலேயே உள்ளன. அவற்றில் எதை நீ முதலில் கூறினாலும் உனக்குக் குற்றமில்லை:
1 . ஸுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூய்மையானவன்)
2 . அல்ஹம்துலில்லாஹ் (புகழ் அனைத்தும் அல்லாஹ்விற்கே)
3 . லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை)
4 . அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மகா பெரியவன்)”
மேலும் தொடர்ந்து அவர்கள் கூறினார்கள்: “உமது பணியாளருக்கு (அல்லது உமது சிறுவனுக்கு) அஃப்லஹ் (வெற்றியாளர்), நஜீஹ் (தேறுபவர்), ரபாஹ் (இலாபமடைபவர்), யஸார் (செல்வந்தர்) என்று பெயர் சூட்ட வேண்டாம்.
அறிவிப்பவர்: ஸமுரா பின் ஜுன்தப் (ரலி)