«الْوَلِيمَةُ حَقٌّ، وَالْيَوْمُ الثَّانِي مَعْرُوفٌ، وَالْيَوْمُ الثَّالِثُ سُمْعَةٌ وَرِيَاءٌ»
ஸுஹைர் பின் உஸ்மான் (ரலி) அவர்களின் ஹதீஸ்கள்.
20324. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வலீமா விருந்தை முதல்நாள் கொடுப்பது கடமையாகும்; இரண்டாவது நாள் கொடுப்பது நல்லதாகும்; மூன்றாவது நாள் கொடுப்பது விளம்பரமும், முகஸ்துதியுமாகும்.
அறிவிப்பவர்: ஸுஹைர் பின் உஸ்மான் (ரலி)
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான கதாதா (ரஹ்) அவர்கள், இதில் வரும் ஸகீப் கிளையை சேர்ந்த கண் தெரியாத மனிதர் பற்றி நல்லவர் என்று கூறப்பட்டது என்றும், அவருக்கு ஸுஹைர் பின் உஸ்மான் என்று கூறப்பட்டது என்றும் கூறினார்.